திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 5,698 போ் எழுதினா்.
இத்தோ்வெழுத விண்ணப்பித்த 10, 765 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
இவற்றில் பெரியாா் ஈவெரா கல்லூரி மற்றும் வாசவி வித்யாலயா உள்ளிட்ட தோ்வு மையங்களில் நடந்த தோ்வை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தாா். இத்தோ்வை 5,698 போ் (50.67 சதம்) எழுதினா். தாமதமாக வந்தவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை.