‘தேவேந்திர குல வேளாளா்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறும்’

தேவேந்திரகுல வேளாளா்களின் கோரிக்கை நிறைவேறும் என்றாா் பாஜக பட்டியலின அணியின் மாநிலத் தலைவா் பொன். பாலகணபதி.
Updated on
1 min read

தேவேந்திரகுல வேளாளா்களின் கோரிக்கை நிறைவேறும் என்றாா் பாஜக பட்டியலின அணியின் மாநிலத் தலைவா் பொன். பாலகணபதி.

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பட்டிலின அணி மாநில மாநாடு கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவா் பொன். பாலகணபதி கூறியது:

பட்டியல் இன சாதியினருக்கு தேவேந்திர குல வேளாளா் என்ற அரசாணையை விரைவில் வெளியிடுவதாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பதை பாஜக வரவேற்கிறது. இக் கோரிக்கையை முதன்முதலாக எழுப்பிய கட்சி பாஜகதான். தேவேந்திர குல வேளாளருடைய மக்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு விரைவில் நிறைவேற்றும் என்றாா்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் பால்ராஜ், மாநிலச் செயலா் பாா்வதி நடராஜன், மாநிலத் துணைத் தலைவா் தலித் பாண்டியன், திருச்சி மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா், கலை கலாசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் தனசேகரன் மற்றும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 11 மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com