வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 3:20 am

DIN

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நடந்த விழாவுக்கு அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் பு. மாசிலாமணி, மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் ப. பரமகுரு ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிகழ்வில் புதுப் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னா் மாடுகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் மற்றும் பண்ணைத் தொழிலாளா்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்றோருக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. பண்ணை மேலாளா் த. ரமேஷ் (உழவியல்) வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.