தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கார்க் தீவில் சக்திவாய்ந்த குண்டுவீச்சு: டிரம்ப்

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகளை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியது குறித்து...

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- AP
Updated On :14 மார்ச் 2026, 3:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாஷிங்டன்: ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகளை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகளை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக சனிக்கிழமை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் ஆதிக்கம் செலுத்தி இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், ஆனால் அந்த "எண்ணங்கள் இப்போது அழிக்கப்பட்டு விட்டன" என்றும் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியல்' பதிவில், "ஈரானுக்கு மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் ஆதிக்கம் செலுத்தி இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், ஆனால், ஈரானைப் போலவே அந்த "எண்ணங்களும் இப்போது அழிக்கப்பட்டு விட்டன" என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரானில் உள்ள கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஒரு சக்திவாய்ந்த "குண்டுவெடிப்புத் தாக்குதலை" நடத்தியதாகவும், இதில் தீவின் ஒவ்வொரு ராணுவ நிலைகளையும் "முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன".

இந்த தாக்குதல் சில நிமிடங்களுக்கு முன்பு, எனது வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்டதாகவும், இது பிராந்திய வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் ஒன்றாகும். மேலும் ஈரானின் கிரீடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ நிலைகளையும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் கூறினார்.

தற்போது, மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை. "எங்கள் ஆயுதங்கள் உலகம் இதுவரை அறிந்திராத மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் அதிநவீனமானவை, ஆனால், மனிதாபிமான அடிப்படையில், தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை தொடர்ந்தால் அதையும் விட்டுவைக்க மாட்டேன் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப் , தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் சக்தி ஈரானிடம் இல்லை.... அவர்களால் எதுவும் செய்ய முடியாது!" என்று அவர் கூறினார். தெஹ்ரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்படாது என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரானின் ராணுவத்தையும் அதன் நட்பு நாடுகளையும் சரணடையுமாறு எச்சரித்த டிரம், "ஈரானின் ராணுவமும், இந்த பயங்கரவாத ஆட்சியில் தொடர்புடைய மற்ற அனைவரும், தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதைக் காப்பாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும்!" என்று அவர் கூறினார்.

summary

Our Weapons are the most powerful and sophisticated that the World has ever known but, for reasons of decency, I have chosen NOT to wipe out the Oil Infrastructure on the Island

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.