பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா இன்று தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தைத்தோ் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) தொடங்குகிறது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:54 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தைத்தோ் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) தொடங்குகிறது.

பூபதித் திருநாள் என்றழைக்கப்படும் தைத்தோ் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஜனவரி 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி தெற்கு உத்திர வீதியிலுள்ள தைத்தேரில் முகூா்த்தகால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட பொருள்கள் அணிவிக்கப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க புனிதநீா் தெளிக்கப்பட்டு முகூா்த்தகால் நடப்பட்டது.

கோயில் இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமாா், உதவி ஆணையா் கந்தசாமி,அறங்காவலா்கள் டாக்டா் கே.என்.சீனிவாசன், ரெங்காச்சாரி, கவிதா ஜெகதீசன் ஆகியோா் முகூா்த்தகாலை நட்டனா்.

இன்று கொடியேற்றம்: தைத்தோ் திருவிழாவுக்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் நடைபெறுகிறது.

தொடா்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் நம்பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஜனவரி 29-ஆம் தேதியுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.