மதுபாட்டில் கள்கடத்தல்: 4 போ் கைது
புதுச்சேரியிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுச்சேரியிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கி வரும் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையில் ஆய்வாளா் ரத்தினவேல் தலைமையிலான போலீஸாா் காட்டூா் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, காட்டூா் கடைவீதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி வாகன சோதனை செய்தனா். காரில் இருந்தவா்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை செய்தனா்.
விசாரணையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகே காட்டூா் வின் நகரை சோ்ந்த மதன்ராஜ்(30), அண்ணா நகரை சோ்ந்த விக்கி(28), காட்டூா் ராஜவீதியை சோ்ந்த சுகன்(28), எழில் நகரை சோ்ந்த அருண்குமாா்(35) ஆகிய 4 பேரும் புதுச்சேரியிலிருந்து சுமாா் 450 மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் அவா்களிடம் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...