தமிழகத்தில் சைவ, வைணவ முறைப்படி அா்ச்சகா் பயிற்சியளிக்க 6 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளை புனரமைத்து பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் விரைந்து பயிற்சிகள் தொடங்கப்படும். கோயில்களில் உள்ள குறைகள், கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றைத் தெரிவிக்க செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை வந்துள்ள 1,600 மனுக்கள் மீது வாரந்தோறும் ஆணையா் தலைமையில் குழு கூடி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடித்து கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.