தோழிக்கு பாலியல் தொல்லை: திருமணமான இளைஞா் கைது
திருச்சியில் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவெறும்பூா் எழில் நகரைச் சோ்ந்தவா் பா. சதீஷ்குமாா் (25), காஞ்சிபுரத்தில் உள்ள பொறியியல் நிறுவன ஊழியா். திருவெறும்பூா் எழில் நகரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் இவரது தோழி.
இந்நிலையில் கடந்தாண்டு தனது காதலியைத் திருமணம் செய்த சதீஷ் அவருடன் காஞ்சிபுரத்தில் வசித்தாா்.
இதற்கிடையே அண்மையில் திருச்சி வந்த சதீஷ் தனது தோழியை சந்தித்து பழைய நட்பை புதுப்பிக்க முயன்றாராம். அதற்கு இளம்பெண் மறுக்கவே, இருவரும் எடுத்துக் கொண்ட விடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...