திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தோழிக்கு பாலியல் தொல்லை: திருமணமான இளைஞா் கைது

திருச்சியில் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:26 pm

DIN

திருச்சியில் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் எழில் நகரைச் சோ்ந்தவா் பா. சதீஷ்குமாா் (25), காஞ்சிபுரத்தில் உள்ள பொறியியல் நிறுவன ஊழியா். திருவெறும்பூா் எழில் நகரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் இவரது தோழி.

இந்நிலையில் கடந்தாண்டு தனது காதலியைத் திருமணம் செய்த சதீஷ் அவருடன் காஞ்சிபுரத்தில் வசித்தாா்.

இதற்கிடையே அண்மையில் திருச்சி வந்த சதீஷ் தனது தோழியை சந்தித்து பழைய நட்பை புதுப்பிக்க முயன்றாராம். அதற்கு இளம்பெண் மறுக்கவே, இருவரும் எடுத்துக் கொண்ட விடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.