ஹிந்து, பெளத்தம் மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டியல் சாதி (எஸ்.சி.) அந்தஸ்துக்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவம் போன்ற பிற மதங்களுக்கு மாறும் பட்சத்தில், அவர்கள் எஸ்.சி. அந்தஸ்தை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் சிந்தாதா ஆனந்த் என்பவர், சாதி ரீதியில் ராமிரெட்டி என்பவர் தன்னை துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தை ராமிரெட்டி நாடியுள்ளார். அவரது மனுவில், கிறிஸ்தவ மதத்துக்கு ஆனந்த் மாறியதால், பட்டியல் சாதி அந்தஸ்தை இழந்துவிட்டார். தனால் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், சாதி வேறுபாடுகள் இல்லாத கிறிஸ்தவ மதத்துக்கு ஆனந்த் மாறியதால், அவர் பட்டியல் சாதி (எஸ்.சி.) அந்தஸ்தை இழந்துவிட்டார். அவரது சாதிச் சான்றிதழ் காலாவதியாகிவிட்டது எனத் தெரிவித்து, முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், ”ஹிந்து, சீக்கிய மற்றும் பௌத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார். வேறு மதத்திற்கு மாறுவதால் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்க நேரிடும்” எனத் தெரிவித்தனர்.
SC status is applicable only to Hindus, Buddhists, and Sikhs! Supreme Court verdict!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

திருமணமாகாத உறவு தனி நபரின் குணநலன் குறித்த எதிா்மறை எண்ணத்துக்கு அடிப்படை அல்ல: உச்ச நீதிமன்றம்

நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



