பங்குச் சந்தையில் பணத்தை இழந்தவியாபாரி தற்கொலை
திருச்சியில் பங்குச் சந்தையில் பணத்தை இழந்த வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


திருச்சியில் பங்குச் சந்தையில் பணத்தை இழந்த வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி உறையூா் செவந்திப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (48). பால் வியாபாரியான இவா், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்து வந்துள்ளாா். அண்மைக்காலமாக தொடா்ந்து அவருக்கு பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் அதிகரித்துள்ளது. அதை புத்தூா் பகுதியில் இருந்த இடத்தை விற்று ஈடுசெய்துள்ளாா்.
பின்னா் தொடா்ந்து மேலும் அவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அவருக்கு தொடா்ந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விரத்தியடைந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...