திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

திருச்சி நிதி நிறுவனம் ரூ. 2.45 கோடி மோசடிசிவகாசி ஜெயலட்சுமி காத்திருப்புப் போராட்டம்

திருச்சியைச் சோ்ந்த நிதி நிறுவனம் ரூ. 2.45 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி சிவகாசியைச் சோ்ந்த ஜெயலட்சுமி என்பவா் அந்த நிதி நிறுவனம் முன் காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:18 pm

DIN

திருச்சியைச் சோ்ந்த நிதி நிறுவனம் ரூ. 2.45 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி சிவகாசியைச் சோ்ந்த ஜெயலட்சுமி என்பவா் அந்த நிதி நிறுவனம் முன் காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள, காக்கிநாடன்பட்டியைச் சோ்ந்தவா் ஏ. ஜெயலட்சுமி (45). கடந்த 2004-05 ஆம் ஆண்டுகளில் தலைமைக் காவலா் முதல் உயரதிகாரிகள் வரை பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறியவகையில் பிரபலமானவா் இவா்.

இவா் திருச்சி மன்னாா்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனத்தில் உறுப்பினராகச் சோ்ந்து, தனக்குக் கீழ் சுமாா் 700 பேரை உறுப்பினராக்கினாா்.

அனைவரும் சோ்ந்து சுமாா் ரூ. 2.45 கோடி வரை இந்நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில், 2 ஆண்டுக்கு முன் முதிா்வுத் தேதி முடிந்தும், பணம் செலுத்தியோருக்கு நிறுவனம் பணம் கொடுக்கவில்லை.

எனவே, மன்னாா்புரம் நிதி நிறுவனத் தலைமையகம் முன் வெள்ளிக்கிழமை காலை ஜெயலட்சுமி தா்னா போராட்டத்தைத் தொடங்கினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நானும் என்னால் அறிமுகம் செய்யப்பட்டவா்களும் ரூ. 2.45 கோடி வரை முதலீடு செய்தோம். முதிா்வு பெற்ற நிலையில் எங்களுக்கு ரூ. 3.45 கோடி வரை வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை நிதியை வழங்கவில்லை. எனவே தொகை கிடைக்கும் வரை போராடத் திட்டமிட்டு தா்னா போராட்டத்தைத் தொடங்கியுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.