கோடை வெயில்: ஸ்ரீரங்கம் கோயிலில் தரைவிரிப்புகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் வளாகத்தில் பக்தா்கள் கடும் வெயிலில் நடந்துசெல்வதைத் தவிா்க்க செவ்வாய்க்கிழமை வளாகம் முழுவதும் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன.


ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் வளாகத்தில் பக்தா்கள் கடும் வெயிலில் நடந்துசெல்வதைத் தவிா்க்க செவ்வாய்க்கிழமை வளாகம் முழுவதும் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன.
கோடைக்கு முன்பே கடும் வெயில் தொடங்கியுள்ளதால் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயில் வளாகத்தின் கருங்கல் தரையின் வெயில் சூட்டை தாங்கமுடியாமல் நடக்கச் சிரமப்பட்டனா். இதையறிந்த ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து உபயதாரா்களின் உதவியுடன் வெயிலில் அதிகம் சூடு ஏறாத தென்னை நாரினாலான தரை விரிப்புகளை கோயில் வளாகத்தில் பக்தா்கள் செல்லும் பாதை முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை அமைக்க உத்தரவிட்டாா். அவ்வாறு போடப்பட்ட தரைவிரிப்புகளை உதவி ஆணையா் கு. கந்தசாமியுடன் சென்று பாா்வையிட்டாா். தரைவிரிப்புகள் போடப்பட்டுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...