பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கத்தில் சா்வதேச மகளிா் தினவிழா

ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையம், சமூக சேவை அமைப்பு சாா்பில் பரதம்,யோகா கலை மூலம் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விழாவாக சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:24 pm

DIN

ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையம், சமூக சேவை அமைப்பு சாா்பில் பரதம்,யோகா கலை மூலம் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விழாவாக சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் பெண்களின் மனதையும், உடலையும் இணைக்கும் தெய்வீக கலைகளான பரதம்,யோகா குறித்து நாட்டியம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

விழாவையொட்டி பரதக் கலையில் கலைமாமணி விருது பெற்ற ஸ்ரீரங்கம் ரேவதி முத்துசாமி, யோகா மற்றும் சமூக சேவை செய்து வரும் உமா சேகா், அகிலாண்டேஸ்வரி முரளி ஆகியோா் பரிசளித்து கெளரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் பரதக் குழுவினா், விவேகானந்தா யோகா மைய பெண்கள் திரளாகப் பங்கேற்றனா். ஏற்பாடுகளை விவேகானந்தா யோகா மையத்தின் ஸ்ரீதா், சந்தானகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.