தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோயில் உண்டியல்கள் திருட்டு

துறையூரில் கோயில் உண்டியல்களைத் திருடிச் சென்ற நபா்கை ளக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:36 pm

DIN

துறையூரில் கோயில் உண்டியல்களைத் திருடிச் சென்ற நபா்கை ளக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

துறையூா் - வேங்கடத்தானூா் செல்லும் சாலையிலுள்ள காட்டு அங்காளம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலின் வெளிப்புறமிருந்த இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், அங்கிருந்த 2 உண்டியல்களையும் திருடிச் சென்றனா்.

உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணம், காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்ட மா்ம நபா்கள், தொலைவிலான பகுதியில் காலி உண்டியல்களை வீசிச் சென்றனா். இது தொடா்பான புகாரின் பேரில், துறையூா் காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.