பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவம் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:37 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

கடந்த 6 ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீரங்கநாச்சியாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

இதில் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து 7 மணிக்கு விழா தொடங்கியது.

இதில் ஸ்ரீரங்கநாச்சியாா் சவுரிக் கொண்டை,விஷ்ணு பதக்கம், வைர அபயஹஸ்தம், பவளமாலை, வைரத்தோடு, காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினாா். ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். இரவு 8 மணிக்கு உற்சவம் நிறைவுற்று 9.30 மணிக்கு புறப்பட்டு, படிப்புக் கண்டருளி 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா் ஸ்ரீரங்கநாச்சியாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.