திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும்.
அதன்படி காா்த்திகை தீபத்திருநாளான இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடா்ந்து உற்ஸவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது.