பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் அம்பு விடும் நிகழ்ச்சி

விஜயதசமியையொட்டி வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:33 pm

DIN

விஜயதசமியையொட்டி வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் 9 நாள்கள் நடைபெற்ற நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இதில் 7 ஆம் திருநாளில் ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி சேவை நடைபெற்றது. வியாழக்கிழமை சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி விழா நிறைவுற்றது.

வெள்ளிக்கிழமை விஜயதசமியையொட்டி அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு 3.30-க்கு கருடமண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா் தொடா்ந்து இரவு 8.45-க்கு அம்பு விடும் நிகழ்வையொட்டி தங்கக் குதிரை வாகனத்தில் அவா் எழுந்தருளினாா்.

வழக்கமாக சிங்கபெருமாள் கோயிலிலுள்ள வன்னிமரத்தில் அம்பு விடும் நிகழ்வு நடைபெறும் நிலையில், கரோனா காரணமாக சுவாமி புறப்பாடு நிறுத்தப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள கருட மண்டபத்திலேயே வன்னிமரக் கிளைகள் வைத்து அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த பல மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை கோயில் திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா் கருடமண்டபத்திலிருந்து 9.15 -க்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

Image Caption

அம்பு விடும் நிகழ்ச்சிக்காக தங்கக் குதிரையில் எழுந்தருளிய நம்பெருமாள். ~ஸ்ரீரங்கம் கோயிலின் கருட மண்டபத்தில் நடைபெற்ற அம்பு விடும் நிகழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.