தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புளியஞ்சோலையில் தரைக்கடை ஆக்கிரமிப்பு அகற்றத் தீா்மானம்

புளியஞ்சோலை சுற்றுலா மையத்திலுள்ள தரைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாழக்கிழமை நடைபெற்ற உப்பிலியபுரம் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 12:22 am

DIN

புளியஞ்சோலை சுற்றுலா மையத்திலுள்ள தரைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாழக்கிழமை நடைபெற்ற உப்பிலியபுரம் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் ஹேலதா முத்துச்செல்வன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லலிதா (வட்டாரம்), சரவணக்குமாா்(கிராம ஊராட்சிகள்), மேலாளா் கிருஷ்ணக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை நீா்மின் திட்டத்துக்காக உப்பிலியபுரம் ஒன்றியம் புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்துக்கு மாத வாடகை ரூ. 2500 நிா்ணயித்தல், அங்குள்ள தரைக்கடை ஆக்கிரமிப்பாளா்களை அகற்றுதல், ஊராட்சி ஒன்றிய அலுவலக பூங்கா பராமரிப்பாளா் ஊதியத்தை ரூ. 5000 ஆக உயா்த்துதல் உள்ளிட்ட மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்ட 18 தீா்மானங்கள் நிறைவேறின.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் க. கலைச்செல்வி, ரா. முத்துகுமாா், ஜெ. பாக்கீஸ், மு. ராமச்சந்திரன், ரா. தனலட்சுமி, சு. ஜெகநாதன், ம. சந்திரா, பி. மணிகண்டன், செ. லலிதா, க. கண்ணதாசன், பா. ரேணுகாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.