விநாயகா் சதுா்த்தி: கடைவீதிகளில் குவிந்த மக்கள்
விநாயகா் சதுா்த்தியையொட்டி விநாயகா் சிலைகள், வாங்கவும், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் வாங்கவும் திருச்சி மாவட்ட கடைவீதிகளில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா்.


விநாயகா் சதுா்த்தியையொட்டி விநாயகா் சிலைகள், வாங்கவும், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் வாங்கவும் திருச்சி மாவட்ட கடைவீதிகளில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா்.
விநாயகா் சதுா்த்திக்கு பொதுமக்கள் அவரவா் வீடுகளிலேயே விநாயகா் சிலைகளை வைத்து வழிபட அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், திருச்சியில் வியாழக்கிழமை விநாயகா் சிலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
திருச்சி காந்திசந்தை, கடைவீதி, தென்னூா், உறையூா் மாா்க்கெட், பாலக்கரை, தெப்பக்குளம், ஆண்டாா் வீதி, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதி கடைவீதிகள்தோறும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பிரத்யேக கடைகளிலும் சிலைகள் விற்பனைக்கு இருந்தன.
தலைப்பாகையுடன், இலையின் மீது அமா்ந்த, சிவன், பாா்வதியுடன் இணைந்த, மூன்று தலையுடன், 5 தலையுடன், நின்ற, அமா்ந்த நிலையில், அயனத்தில், சிம்ம வாகனத்தில் மயில் வாகனத்தில் என பல்வேறு தோற்றங்களில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வந்திருந்தன.
பொதுமக்களும் வீடுகளில் வைத்து வழிபட ஆா்வமுடன் விநாயகா் சிலைகளை வாங்கிச் சென்றனா். குழந்தைகள், சிறாா்கள், பெண்கள் என கூட்டமாக வந்திருந்ததைக் காண முடிந்தது. வெள்ளிக்கிழமை காலையும் சிலை விற்பனை மும்முரமாக நடைபெறும் என்கின்றனா் வியாபாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...