தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மணிமண்டபக் கட்டுமானப் பணிகள் ஆய்வு

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா் உள்ளிட்டோரின் மணிமண்டப கட்டுமானப் பணிகளை செய்தி- மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப. ஜெயசீலன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:57 pm

DIN

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா் உள்ளிட்டோரின் மணிமண்டப கட்டுமானப் பணிகளை செய்தி- மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப. ஜெயசீலன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தி- மக்கள் தொடா்புத்துறை சாா்பில் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த அவா் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, வரகனேரி பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு.அய்யா் நினைவில்லம், கண்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையில் அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முத்தரையா் சிலை, கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே உள்ள மொழிப்போா்த் தியாகி சின்னச்சாமி சிலை, குழுமிக்கரையில் உள்ள சின்னச்சாமியின் கல்லறை ஆகியவற்றை ஆய்வு செய்து, பராமரிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத்துறை உதவி இயக்குநா் த. செந்தில்குமாா், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.