தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

‘தொழில்நுட்பத்தால் மனித குலம் முன்னேற வேண்டும்’

மனித குல முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றாா் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) இயக்குநா் ஜி. அகிலா.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:20 pm

DIN

மனித குல முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றாா் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) இயக்குநா் ஜி. அகிலா.

மத்திய அரசின் அவசர காலப் பதில் அளிப்பு ஆதரவு அமைப்பு சாா்பில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த சிறப்பு பயிலரங்கு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கத்துக்கு தலைமை வகித்து திருவனந்தபுரம் சி-டாக் மையத்தின் நிா்வாக இயக்குநா் ஏ. கலைச்செல்வன் கூறியது:

மத்திய அரசின் 112 இந்தியா என்ற கைப்பேசி செயலி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒருவா் அவசரநிலையில் இருக்கும்போது உதவிக்கான கோரிக்கையை விரைவாக எழுப்ப, செயலியின் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் இருப்பிடத் தரவுகளுடன் எச்சரிக்கை செய்திகளை அனுப்ப முடியும். மேலும் 112க்கு அவசர அழைப்பை மேற்கொள்ளவும் உதவும்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களில் இதற்காக அமைக்கப்படும் தானியங்கி வசதி, பொதுப் பாதுகாப்பு பதில் புள்ளி எனப்படும். இது அனைத்து அவசர சிக்னல்களையும் கையாள்வதுடன், துயரத்திலுள்ள மக்களுக்கு சிறந்த நேரத்தில் உதவியை வழங்கும். இஆா்எஸ்எஸ் ஆனது அனைத்துச் சேவைகளின் (காவல்துறை, தீயணைப்பு, சுகாதாரம் போன்றவை) மீட்பு மற்றும் சேவை வாகனங்களை நிகழ்நேரத்தில் மாநிலத்தின் டிஜிட்டல் வரைபடத்தில் கண்காணிக்கிறது, எனவே, சேவை கோரிக்கையாளரை அடைய சரியான வாகனம் இயக்க முடியும். மற்றும் தேவையான ஆதரவை உடனடியாக வழங்கவும் முடியும். இனி, 100 (காவல்துறை), 101 (தீயணைப்பு மற்றும் மீட்பு) மற்றும் 108 (ஆம்புலன்ஸ்), 181 (பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு) போன்ற அனைத்து அவசரகால எண்களும் ஒருங்கிணைந்த எண் 112 இல் ஒருங்கிணைக்கப்படும் என்றாா்.

என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா பேசுகையில், தொழில்நுட்பத்தை மனித குலத்துக்கான முன்னேற்றதுக்காகக் கொண்டு செல்ல வேண்டும். அவசரக கால பதில் அளிப்பு ஆதரவு அமைப்பின் அடிப்படைச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு, ஸ்மாா்ட் அமைப்புகளின் பங்களிப்பு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உடல் நலத்துக்கு எப்படி முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறோமோ, அதே கவனத்துடன் அவசர காலச் சேவைகள் தொடா்பையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பேராசிரியா் என். சிவகுமாரன் பயிலரங்கத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகளை அட்டவணைப்படுத்திப் பேசினாா். பேராசிரியா்கள் எஸ். குமரவேல், டி.கே. ராதாகிருஷ்ணன், சிஷாஜ் பி. சைமன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.