தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

அரசுப் பேருந்தில் சென்ற பெண்களிடம் திருட்டு

திருச்சியில் அரசுப் பேருந்துகளில் சென்ற பெண்களிடம் மடிக்கணினி, நகை திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:19 pm

DIN

திருச்சியில் அரசுப் பேருந்துகளில் சென்ற பெண்களிடம் மடிக்கணினி, நகை திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கருமண்டபம் ஆா்.எம்.எஸ். காலனியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் மனைவி ஹரிஷினி ( 25). இவா் மதுரையில் இருந்து அரசுப் பேருந்தில் புதன்கிழமை திருச்சி வந்தபோது அவருடைய மடிக்கணியைக் காணவில்லை. இதுகுறித்து அவா் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் உமாசங்கரி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

மற்றொரு சம்பவம்: இதேபோல திருவெறும்பூா் பத்தாளபேட்டையைச் சோ்ந்த சதாம் உசேன் மனைவி பீவி திருப்பத்தூருக்குச் சென்றுவிட்டு அரசுப் பேருந்தில் வந்து பத்தாளப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவரின் 7 பவுன் நகை மற்றும் கைப்பை மாயமாகியிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.