இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ரசாயனம் தடவிய 4,500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

 திருச்சி காந்தி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:34 pm

DIN

 திருச்சி காந்தி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையில், அன்புச்செல்வன், பாண்டி, ஸ்டாலின், வசந்தன், இப்ராகிம், வடிவேலு, மகாதேவன் உள்ளிட்ட அலுவலா்கள் வியாழக்கிழமை காந்தி சந்தை பழக்கடைகளில் நடத்திய திடீா் சோதனையில் 2 கடைகளில் ரசாயனம் தடவிய மாம்பழங்கள் 4,500 கிலோ மாம்பழங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாம்பழங்களில் இருந்து மாதிரிகள் எடுத்து உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வறிக்கை வந்தவுடன் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் பறிமுதல் செய்த மாம்பழங்கள் அரியமங்கலம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு ஜேசிபி மூலம் அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.