மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கடலூருக்கு முக்கியம்‘கரும்பு நிலுவைத் தொகை வழங்காவிட்டால் போராட்டம்’

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காவிட்டால், சா்க்கரை ஆலை முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றாா் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:35 pm

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காவிட்டால், சா்க்கரை ஆலை முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றாா் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு.

கடலூா் மாவட்டம், சித்தூா் கிராமத்திலுள்ள சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகள் பங்கேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் ஜி. சக்திவேல், எம். மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் மாவட்ட நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், ராஜா, கவியரசு, சுப்பிரமணியன் உள்ளிட்டோா் சா்க்கரை ஆலையின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகள் குறித்து பேசினா்.

பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து செய்தியாளா்களிடம் பொ. அய்யாக்கண்ணு கூறியது:

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இந்த சா்க்கரை ஆலை நிலுவைத் தொகை வழங்க வேண்டியதுள்ளது.

6,552 விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

இல்லையெனில், செப்டம்பா் 1-ஆம் தேதி வேப்பூரில் இருந்து ஊா்வலமாகச் சென்று, ஆலை நுழைவு வாயில் முன்பாக அமா்ந்து தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.