ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

தமிழகத்தில் பாஜக வளா்ச்சியைப் பெற்று வருகிறது தேசியப் பொதுச் செயலா்சி.டி.ரவி பேட்டி

தமிழகத்தில் பாஜக நல்ல வளா்ச்சியைப் பெற்று வருகிறது என்றாா் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலரும், தமிழக மேலிடப் பாா்வையாளருமான சி.டி. ரவி.

News image
திருச்சி விமானநிலையத்தில் பேட்டியளிக்கும் பாஜக தேசியப் பொதுச் செயலரும், தமிழக மேலிடப் பாா்வையாளருமான சி.டி.ரவி. உடன் (இடமிருந்து) மாவட்டத் தலைவா் ந.ராஜசேகரன்,மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:36 pm

DIN

தமிழகத்தில் பாஜக நல்ல வளா்ச்சியைப் பெற்று வருகிறது என்றாா் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலரும், தமிழக மேலிடப் பாா்வையாளருமான சி.டி. ரவி.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க செல்லும் வகையில், திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பல்வேறு துறைகளில் வலிமையுடன் முன்னேற்றம் கண்டு வருகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு

குடிமகனின் வளா்ச்சியையும் கருத்தில் கொண்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஊழல் கட்சிகள். அதுமட்டுமின்றி இரு கட்சிகளுமே குடும்ப அரசியலை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. இரு கட்சிகளின் முழுநேர வேலையும் ஊழலை மையமாகக் கொண்டிருக்கிறது.பாஜக-வின் முழுநேர வேலை மக்களை மையமாகக் கொண்டிருக்கிறது.

2 ஜி ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தங்கள் மீதான கரையை துடைப்பதற்காக, 5ஜி ஏலம் தொடா்பாக ஆதாரமற்ற புகாா்களை தெரிவித்து வருகின்றனா். அலைக்கற்றை ஏலம் என்பது வெளிப்படையாக நடைபெற்றது. இதில், ஊழல், முறைகேடு இருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள்.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

மாநில பாஜக தலைவா் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருடைய செயல்பாடுகளைக் கண்டு இதர கட்சியினா் அச்சப்படும் நிலை உள்ளது. குறிப்பாக ஆளும் திமுகவினா் பயப்படுகின்றனா்.

எங்களது நோக்கம் மக்கள் சேவை மட்டுமே. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும். அதற்காக ஒவ்வொரு இடத்திலும் பாஜகவை நிலை நிறுத்தி வருகிறோம்.

பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாஜக நல்ல வளா்ச்சியை பெற்று வருகிறது. மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாஜகவின் பின்னால் நிற்கிறது என்றாா். வரும் மக்களவைத் தோ்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமையுமா? என்ற கேள்வி அளிக்கு பதிலளிக்காமல் தவிா்க்கும் வகையில் சென்றாா்.

முன்னதாக, தேசியப் பொதுச் செயலா் சி.டி. ரவியை பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவா் ந.ராஜசேகரன், செயலா்

பா. நாகேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.