இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் காவல்துணைக் கண்காணிப்பாளா் சீத்தாராமன்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:34 pm

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீத்தாராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். துணை மருத்துவப்படிப்பு மாணவ - மாணவிகள், செவிலியா், இயன்முறை மருத்துவ மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சென்றனா்.

இப்பேரணியில் சமயபுரம் காவல் ஆய்வாளா் பொன் ராஜு, உதவி காவல் ஆய்வாளா் பிரகாஷ், ஜெயசீலன், தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் முதன்மையா் துளசி, பேராசிரியா்கள் பேச்சியம்மாள், சதீஷ், உடற்கல்விப் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.