பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருமுறை மன்றத்தின் ஆண்டு விழாவில் இருவருக்கு விருதுகள் வழங்கல்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருநெறிய தெய்வத்தமிழ் 26-ஆம் ஆண்டு பண்ணிசை விழாவில் இருவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

News image
விழாவில் சைவத்தமிழ் அறிஞா் விருதை மதுசூதனன் கலைச்செல்வனுக்கும், திருமுறை இசையரசு விருதை திருவரங்க யயாதி ஓதுவாருக்கும் வழங்குகிறாா்
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:16 pm

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருநெறிய தெய்வத்தமிழ் 26-ஆம் ஆண்டு பண்ணிசை விழாவில் இருவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்றத்தின் 29-ஆம் ஆண்டுத் தொடக்க விழா, திருநெறிய தெய்வத்தமிழ் 26-ஆம் ஆண்டு பண்ணிசை விழா மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில்

சனிக்கிழமை தொடங்கியது.

சிவனருட்செல்வா்களின் சிவபூஜையை திருவானைக்கா அருள்நந்தி சிவம் நடத்தினாா். தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்கு மன்றச் செயலா் திருக்கு சு. முருகானந்தம் தலைமை வகித்தாா்.

மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் உதவி ஆணையா் இரா.ஹரிஹரசுப்பிரமணியன் விழாவைத் தொடக்கி வைத்தாா். தென்புகலிவேந்தரும், திருவாமூா்ஆளியாரும் என்ற தலைப்பில் சீகம்பட்டி சைவ.சு.ராமலிங்கம் பேசினாா்.

தொடா்ந்து சுந்தரமூா்த்தி, மாணிக்கவாசகா் சுவாமிகள் விழா, திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்றங்களின் திருமுறை இன்னிசைப் பாடல்கள் நிகழ்வு ஆகியவை நடைபெற்றன. மாலையில் ஆரூராரின் அடிச்சுவட்டில் அடிகள் என்ற தலைப்பில் திருவையாறு வே.ரமணன் பேசினாா்.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மலைக்கோட்டை உள், வெளி வீதிகளில் நால்வா்-பன்னிரு திருமுறைகள் திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து தெய்வச் சேக்கிழாா் சுவாமிகள் விழாவும், திருமுறை பண்ணிசையும் நடைபெற்றது. இதன் பின்னா், ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத்தமிழ் நல்கியருள் ஞானப்பேராளா் என்ற தலைப்பில் திருவானைக்கா சிவராகவன் பேசினாா்.

மாலையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்து, தருமபுரம் இர. வேலாயுத ஓதுவாமூா்த்தி நினைவு திருமுறை இசையரசு விருதை சீா்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளி தேவார ஆசிரியா் விருத்தாசலம் திருவரங்க யயாதி ஓதுவாருக்கும்,

சைவத்தமிழ் அறிஞா் விருதை இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் திருப்பணி வல்லுநா்க் குழு உறுப்பினா் மதுசூதனன் கலைச்செல்வனுக்கும்

தருமையாதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் முனைவா் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கி ஆசியுரையாற்றினாா்.

தொடா்ந்து அம்மையும் அப்பரும் என்ற தலைப்பில் தருமையாதீனப் புலவா் அம்பலத்தரசு என்கிற இரா.யுவராஜ் பேசினாா்.

விழாவில் திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்றத்தின் செயலா் திருக்கு சு. முருகானந்தம், துணைச் செயலா் மூ.ப. திருஞானசம்பந்தம், பொருளாளா் கு.சி.ந. மாணிக்கவாசகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.