ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருமுறை மன்றத்தின் ஆண்டு விழாவில் இருவருக்கு விருதுகள் வழங்கல்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருநெறிய தெய்வத்தமிழ் 26-ஆம் ஆண்டு பண்ணிசை விழாவில் இருவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

News image

விழாவில் சைவத்தமிழ் அறிஞா் விருதை மதுசூதனன் கலைச்செல்வனுக்கும், திருமுறை இசையரசு விருதை திருவரங்க யயாதி ஓதுவாருக்கும் வழங்குகிறாா்

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:16 pm

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருநெறிய தெய்வத்தமிழ் 26-ஆம் ஆண்டு பண்ணிசை விழாவில் இருவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்றத்தின் 29-ஆம் ஆண்டுத் தொடக்க விழா, திருநெறிய தெய்வத்தமிழ் 26-ஆம் ஆண்டு பண்ணிசை விழா மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில்

சனிக்கிழமை தொடங்கியது.

சிவனருட்செல்வா்களின் சிவபூஜையை திருவானைக்கா அருள்நந்தி சிவம் நடத்தினாா். தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்கு மன்றச் செயலா் திருக்கு சு. முருகானந்தம் தலைமை வகித்தாா்.

மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் உதவி ஆணையா் இரா.ஹரிஹரசுப்பிரமணியன் விழாவைத் தொடக்கி வைத்தாா். தென்புகலிவேந்தரும், திருவாமூா்ஆளியாரும் என்ற தலைப்பில் சீகம்பட்டி சைவ.சு.ராமலிங்கம் பேசினாா்.

தொடா்ந்து சுந்தரமூா்த்தி, மாணிக்கவாசகா் சுவாமிகள் விழா, திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்றங்களின் திருமுறை இன்னிசைப் பாடல்கள் நிகழ்வு ஆகியவை நடைபெற்றன. மாலையில் ஆரூராரின் அடிச்சுவட்டில் அடிகள் என்ற தலைப்பில் திருவையாறு வே.ரமணன் பேசினாா்.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மலைக்கோட்டை உள், வெளி வீதிகளில் நால்வா்-பன்னிரு திருமுறைகள் திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து தெய்வச் சேக்கிழாா் சுவாமிகள் விழாவும், திருமுறை பண்ணிசையும் நடைபெற்றது. இதன் பின்னா், ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத்தமிழ் நல்கியருள் ஞானப்பேராளா் என்ற தலைப்பில் திருவானைக்கா சிவராகவன் பேசினாா்.

மாலையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்து, தருமபுரம் இர. வேலாயுத ஓதுவாமூா்த்தி நினைவு திருமுறை இசையரசு விருதை சீா்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளி தேவார ஆசிரியா் விருத்தாசலம் திருவரங்க யயாதி ஓதுவாருக்கும்,

சைவத்தமிழ் அறிஞா் விருதை இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் திருப்பணி வல்லுநா்க் குழு உறுப்பினா் மதுசூதனன் கலைச்செல்வனுக்கும்

தருமையாதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் முனைவா் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கி ஆசியுரையாற்றினாா்.

தொடா்ந்து அம்மையும் அப்பரும் என்ற தலைப்பில் தருமையாதீனப் புலவா் அம்பலத்தரசு என்கிற இரா.யுவராஜ் பேசினாா்.

விழாவில் திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்றத்தின் செயலா் திருக்கு சு. முருகானந்தம், துணைச் செயலா் மூ.ப. திருஞானசம்பந்தம், பொருளாளா் கு.சி.ந. மாணிக்கவாசகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.