காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துறையூர் அருகே தனியார் பேருந்தில் திடீர் தீ

துறையூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.

News image

தீப்பிடித்து எரிந்த பேருந்து.

Updated On :31 டிசம்பர் 2022, 10:58 am

DIN

துறையூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செந்தாரப்பட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றது.

Story image

இந்நிலையில் அந்த பேருந்து கொப்பம்பட்டி - த. முருங்கபட்டி இடையே சென்று கொண்டிருந்தபோது நாக நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

Story image

பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து உப்பிலிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

Story image

பேருந்தின் டீசல் டேங்கில் இருந்து செல்லும் குழாயில் டீசல் கசிவு மற்றும் உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.