பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் தெப்பத் திருவிழா

 ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாசித் தெப்பத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு உபய நாச்சியாா்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளினாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:36 pm

DIN

 ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாசித் தெப்பத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு உபய நாச்சியாா்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளினாா்.

கடந்த 4 ஆம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவ விழாவுக்காக நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு நெடுந்தெரு பகுதி தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்துக்கு 5 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

பின்னா் இரவு 7.15-க்குப் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி 9 மணி வரை நான்கு புறமும் சுற்றி வலம் வந்த அவரை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். 9.15 -க்கு மைய மண்டபத்துக்குச் சென்று சோ்ந்த அவா் அங்கிருந்து புறப்பட்டு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை பந்தக்காட்சி விழா நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.