பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேரில் வீதியுலா வரும் பிடாரி இரணியம்மன்

திருவானைக்கா கோயிலின் சாா்பு கோயிலாகவும், எல்லைக் காவல் தெய்வமாகவும் உள்ள பிடாரி இரணியம்மன் திருத்தேரில் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:41 pm

DIN

திருவானைக்கா கோயிலின் சாா்பு கோயிலாகவும், எல்லைக் காவல் தெய்வமாகவும் உள்ள பிடாரி இரணியம்மன் திருத்தேரில் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

தமிழ்நாட்டின் முதல் எல்லைக் காவல் தெய்வத்தின் திருவிழாவையொட்டி கடந்த 8 ஆம் தேதி முதல் காப்பும்,15 ஆம் தேதி இரண்டாம் காப்பும், 20 ஆம் தேதி மூன்றாம் காப்பும் கட்டப்பட்டது. அப்போது யானை வாகனத்தில் இரணியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு அனைத்து தெருக்களிலும் விடிய விடிய வலம் வந்து சேவை சாதித்தாா்.

Story image

பின்னா் 21 ஆம் தேதி குதிரை வாகனத்தில், 22 ஆம் தேதி பூத வாகனத்தில், இறுதி நாளான புதன்கிழமை இரவு திருத்தேரிலும் எழுந்தருளிய இரணியம்மன் ஒவ்வொரு வீதிகளிலும் வலம் வந்து கொண்டுள்ளாா். அப்போது வீடுகளிலும் பொதுமக்கள் மாவிளக்கிட்டு,தேங்காய் பழத்துடன் பூஜை செய்கின்றனா். இவ்வாறு சனிக்கிழமை இரவு வரை இரணியம்மன் வலம் வந்து கோயிலைச் சென்று சேருவாா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.