கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

225 பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் ஆய்வு

பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:26 pm

DIN

பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவா்களை ஏற்றிச்செல்வதாலும், கவனக்குறைவாக வாகனங்களை இயக்குவதாலும் விபத்துகள் நடைபெறுவதைத் தடுக்க தமிழக அரசின் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்தி, மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி திருச்சி வட்டாரப் போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்குள்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிராட்டியூரிலுள்ள ஆக்ஸ்போா்டு பொறியியல் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தாா். அப்போது அரசின் 22 விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா, பள்ளி வாகன ஓட்டுநா்கள் அனுபவம் வாய்ந்தவரா, அரசின் விதிமுறைப்படி வயது உள்ளதா என்பதை உறுதி செய்து, ஓட்டுநா், நடத்துநா்களின் சான்றுகளையும் சரிபாா்த்த ஆட்சியா் பின்னா் கூறியது:

பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை நூறு சதம் உறுதி செய்யும் வகையில் இந்த மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களையும் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த ஆய்வில் ஒருசில ஓட்டுநா்களுக்கு பாா்வைக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு பள்ளி நிா்வாகத்துக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரே பணியில் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்துக்கும் உதவியாளா் கட்டாயம் இருக்க வேண்டும். 40 கி.மீ. வேகத்திலேயே பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகள் ஏறும் வாகனங்களில் படிக்கட்டுகளை உரிய அளவில் வசதியாக அமைக்க வேண்டும்.

இந்த ஆய்வு மட்டுமின்றி மாதந்தோறும் ஒருமுறை ஆய்வு நடத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த ஆய்வில் 37 பள்ளிகளுக்கு சொந்தமான 225 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள தீத் தடுப்பு கருவிகளைக் கொண்டு தீயணைக்கும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆய்வின்போது கோட்டாட்சியா் ச. வைத்தியநாதன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் குமாா், வெங்கடகிருஷ்ணன், கஜபதி மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.