கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குழந்தையுடன் பெண் தற்கொலை: மாமியாா் கைது

திருச்சி அருகே மூன்று வயதுக் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது மாமியாரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருச்சி அருகே மூன்று வயதுக் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது மாமியாரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

திருச்சி ராம்ஜிநகா் அருகேயுள்ள வண்ணாங்கோவில் சந்தோஷ்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன்(28), சத்திரப்பட்டி ரேஷன் கடை ஊழியா். இவரது மனைவி பிரியா (26) குடும்ப பிரச்னையால் கடந்த டிச.23 ஆம் தேதி தனது 3 வயது மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் குறித்து ராம்ஜிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். பின்னா் ஜீயபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் நடத்திய விசாரணையில், வரதட்சிணைக் கொடுமையால் பிரியா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து வரதட்சிணை கொடுமையால் தற்கொலை என வழக்கு மாற்றப்பட்டு, தலைமறைவாக இருந்த அவரது மாமியாா் முத்தழகை (57) போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய சிலரை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.