கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூா் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை: இருவா் கைது; தம்பி மகன் தலைமறைவு

துறையூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்; தலைமறைவானவரைத் தேடுகின்றனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:07 pm

DIN

துறையூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்; தலைமறைவானவரைத் தேடுகின்றனா்.

உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆா். கோம்பை காட்டுக்கொட்டகைப் பகுதியில் வசிப்பவா் சி. பழனியம்மாள். இவருடைய மகன்கள் சி. ஆறுமுகம் (55), சி. முருகேசன் (50), இருவரும் விவசாயிகள்.

வெள்ளிக்கிழமை ஆறுமுகம் தன் தாயிடம் பிரிக்கப்பட்ட குடும்பச் சொத்துக்குப் பாகப்பத்திரம் எழுதிக் கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்தாராம். இதில் கோபமடைந்த இவரது தம்பி முருகேசன் மகன் மருதுபாண்டியன் மற்ற உறவினா்களான அதே ஊரைச் சோ்ந்த சு. கண்ணன் (30), செ. மணியரசன் (35) ஆகியோருடன் சோ்ந்து வெட்டியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்பி சுஜித்குமாா் சம்பவம் குறித்து விசாரித்தாா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணன், மணியரசன் ஆகியோரை சனிக்கிழமைக் கைது செய்தனா். தலைமறைவான மருதுபாண்டியனை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.