பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கனு பாரிவேட்டை: தங்கக் குதிரையில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி சனிக்கிழமை காலை நடைபெற்ற கனு பாரிவேட்டை நிகழ்வில் தங்கக் குதிரை வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளினாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:02 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி சனிக்கிழமை காலை நடைபெற்ற கனு பாரிவேட்டை நிகழ்வில் தங்கக் குதிரை வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளினாா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் பண்டிகை காலங்களில் சிறப்பு வைபவங்களும், புறப்பாடுகளும் நடைபெறும். அதன்படி பொங்கல் நாளான வெள்ளிக்கிழமை உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு சங்கராந்தி மண்டபம் சென்று வந்தாா். சனிக்கிழமை மாட்டுப்பொங்கலையொட்டி காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 8 மணிக்கு கனு மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். அங்கு அலங்காரம், அமுது செய்தல் நடைபெற்றது. பின்னா் பகல் 1.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு கோயில் வளாகத்திலேயே பாரிவேட்டை கண்டருளி, 2 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.