திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சசிகலாவின் கார் கண்ணாடி உடைப்பு! ஃபாஸ்ட்டேக் சர்ச்சை

சுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர்.

News image
Updated On :9 ஜூலை 2022, 4:18 pm IST

திருச்சி: சுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர்.

சசிகலா சென்னையில் இருந்து காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 2 மணியளவில், திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் கடந்த போது  தானியங்கி தடுப்பு காரின் கண்ணாடி மேல் பட்டதால் காரின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சசிகலா காரை நிறுத்திய நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் துவாக்குடி காவல் நிலைய காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்பாராத விதமாக நடந்து விட்டதாக கூறி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் விசாரித்தபோது, சசிகலாவின் காரில் ஃபாஸ்ட்டேக் இல்லை என்றும், விஐபிக்காக ஒதுக்கப்பட்ட 11 ஆம் எண் பாதையிலும் செல்லாததன் காரணமாகவே இது போன்று நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.