தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

சசிகலாவின் கார் கண்ணாடி உடைப்பு! ஃபாஸ்ட்டேக் சர்ச்சை

சுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:15 pm IST

திருச்சி: சுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர்.

சசிகலா சென்னையில் இருந்து காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 2 மணியளவில், திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் கடந்த போது  தானியங்கி தடுப்பு காரின் கண்ணாடி மேல் பட்டதால் காரின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சசிகலா காரை நிறுத்திய நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் துவாக்குடி காவல் நிலைய காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்பாராத விதமாக நடந்து விட்டதாக கூறி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் விசாரித்தபோது, சசிகலாவின் காரில் ஃபாஸ்ட்டேக் இல்லை என்றும், விஐபிக்காக ஒதுக்கப்பட்ட 11 ஆம் எண் பாதையிலும் செல்லாததன் காரணமாகவே இது போன்று நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.