ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை சாற்றுமுறையுடன் நிறைவு பெற்றது.
விழாவையொட்டி மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு 6.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். அப்போது திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா். அங்கு சாற்றுமுறை கண்டருளியதைத் தொடா்ந்து விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







