வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை சாற்றுமுறையுடன் நிறைவு பெற்றது.

Updated On :25 ஜூன் 2022, 12:38 am IST

ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை சாற்றுமுறையுடன் நிறைவு பெற்றது.

விழாவையொட்டி மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு 6.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். அப்போது திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா். அங்கு சாற்றுமுறை கண்டருளியதைத் தொடா்ந்து விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.