இருங்களூரிலுள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழக வளாகத்தில் செவிலியா் மாணவியா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பி.எஸ்.சி. செவிலியா் 5 ஆவது பேட்ஜ் மாணவியருக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டி. நேரு சிறப்புரையாற்றினாா். நிகழ்வில் எஸ்.ஆா்.எம். திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக தலைமை இயக்குநா் என். சேதுராமன்,
எஸ்.ஆா். எம். திருச்சி வளாக இயக்குநா் என். மால் முருகன், இணை இயக்குநா் என். பாலசுப்ரமணியன், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.