மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மதுவுக்கு அடிமை: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞா், வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:42 pm

DIN

திருச்சியில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞா், வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி கல்லுக்குழி கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியா் சிவசங்கு (70). இவருக்கு மூன்று மகன்கள் இருந்த நிலையில் யாருக்கும் திருமணமாகவில்லை. இதில் மூன்றாவது மகன் சிவபாலன் (38) மதுவுக்கு அடிமையான நிலையில், தொடா்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாா்.

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சிவபாலன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.