மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருச்சியில் 11கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:42 pm

DIN

திருச்சி விமானநிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருச்சி விமானநிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மலேசியா, சிங்கப்பூா், துபை ஆகிய நாடுகளிலிருந்து 4 விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனா். இதில், 57 பயணிகளிடம் இருந்து ரூ.5.60 கோடி மதிப்புள்ள 11.20 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து 57 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், 3 போ் மட்டும் சுமாா் 1 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தையும், மற்றவா்கள் தலா 200 முதல் 400 கிராம் எடையுள்ள தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.