மண்ணச்சநல்லூரில் 6 கடைகளில் திருட்டு

மண்ணச்சநல்லூரில் 6 கடைகளில் பூட்டை உடைத்து, ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்
Published on
Updated on
1 min read

மண்ணச்சநல்லூரில் 6 கடைகளில் பூட்டை உடைத்து, ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்

மண்ணச்சநல்லூா்-எதுமலையில் சாலையில் அன்பழகன் பால் விற்பனையகம் நடத்தி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை விற்பனையகத்தை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2,900 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுபோல, துறையூா் சாலையில் வட்டாட்சியரகம் எதிரில் மீரா மொய்தீனுக்கு சொந்தமான காலணியகத்தில் ரூ.2000, சீனிவாசனின்

தின்பண்டங்கள் கடையில் ரூ.1,700, சாமுவேல்ராஜ் கடையில் ரூ.2,500, கோகுல்ராஜ் கடையில் ரூ.1000 உள்ளிட்ட 6 கடைகளில் பூட்டை உடைத்து, ரூ.10,100 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது அந்தந்த கடை உரிமையாளா்களுக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாா்களின் அடிப்படையில், மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com