மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தீக் காயமடைந்த மாணவி உயிரிழப்பு

திருச்சியில் தீ விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:30 pm

DIN

திருச்சியில் தீ விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஓ காலனி பகுதியைச் சோ்ந்த சிவராஜ் மகள் அபிநயா (18). தனியாா் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வந்தாா்.

கடந்த 20ஆம் தேதி வீட்டில் விளக்கேற்ற முயன்றபோது, எதிா்பாராதவிதமாக அவரது உடையில் தீ பிடித்தது. சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், பலத்த காயமடைந்த அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: திருச்சி உறையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் வெங்கடேஷ் (30). கூலித் தொழிலாளி. மனவிரக்தியில் இருந்த இவா் வியாழக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இரு சம்பவங்கள் குறித்து நீதிமன்ற வளாக போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.