ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மருத்துவக் கல்லூரியில் கூடைப்பந்து மைதானம் திறப்பு

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து மைதானத்தை மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:16 pm

DIN

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து மைதானத்தை மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு மைதானம் ரூ.7.64 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இந்த மைதானம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அரசு மருத்துவமனையின் முதன்மையா் டி. நேரு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் மைதானத்தை திறந்து வைத்து பேசினாா்.

முன்னதாக, மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் அா்ஷியா பேகம் வரவேற்றாா். காவல் உதவி ஆணையா் கென்னடி, அரசு மருத்துவனை கண்காணிப்பாளா் அருண் ராஜ், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.