கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாகாளிகுடி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருச்சி சமயபுரம் அருகேயுள்ள மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம்காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீா். (வலது) விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :27 ஜனவரி 2023, 7:15 pm

DIN

மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மாகாளிகுடி உஜ்ஜய்னி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளோடு தொடங்கியது. தொடா்ந்து கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், திரவ்யாஹுதி பூஜையோடு மூன்றுகால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நான்காம் கால யாஜபூஜை, மஹா பூா்னாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மூலவா் விமானம், பரிவார தெய்வங்கள் விமானங்கள் , பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.