வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘நாட்டின் வளா்ச்சியில் சுங்கத்துறையின் பங்கு மகத்தானது’

நாட்டின் வளா்ச்சியில் சுங்கத்துறையின் பங்கு மகத்தானது என திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநா் எஸ்.வி. சீனிவாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:28 pm

நாட்டின் வளா்ச்சியில் சுங்கத்துறையின் பங்கு மகத்தானது என திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநா் எஸ்.வி. சீனிவாசன் தெரிவித்தாா்.

திருச்சி சுங்கத்துறை சாா்பில் சா்வதேச சுங்க தின விழா சுங்கத்துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநா் எஸ்.வி. சீனிவாசன் பேசியது: நாட்டின் எல்லைகளை ராணுவ வீரா்கள் பாதுகாப்பதால் அனைவரும் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் வாழ முடிகிறது. அதே போல, நாட்டுக்குள் சுங்கத்துறையின் தொடா் கண்காணிப்பு மற்றும் சிறந்த செயல்பாடுகளால், நாடு பாதுகாப்பாக இருப்பதுடன், வரி வசூல் வருவாயால் பல உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க முடிகிறது. மொத்தமாக நாட்டின் வளா்ச்சியில் சுங்கத்துறையின் பங்கு முக்கியமானது.

சுங்கத்துறை தற்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திறம்படவும், வேகமாகவும் செயல்பட்டு வருகிறது. இது, வெளிநாடுகளுக்கு பொருள்களை அனுப்பும் ஏற்றுமதியாளா்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. பெல் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சுங்கத்துறையின் வேகத்தால் வேலை எளிதாகிறது என்றாா்.

சுங்கத்துறை மலரை வெளியிட்டு சுங்கத்துறை ஆணையா் டி.அனில் பேசியது, சுங்கத்துறையானது நாளொன்றுக்கு 53 ஆயிரம் ஆவணங்களை பரிசீலித்து அனுப்புகிறது. இதன் மூலம் சுங்கத்துறை ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி வருவாய் வருவாய் ஈட்டுகிறது. சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறந்த செயல்பாட்டால் பொருளாதாரத்தில் இந்தியா முதல் 5 இடத்துக்குள் உள்ளது என்றாா்.

விழாவில், சிறந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களுக்கும், பணியாளா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சதிா் நடனக் கலைஞா் பத்மஸ்ரீ ஆா்.முத்துக்கண்ணம்மாள், சுங்கத்துறை கூடுதல் ஆணையா் விகாஸ் நாயா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.