தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தொட்டியம் அருகே தனியாா் வங்கியை கிராம மக்கள் முற்றுகை

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மணமேடு பகுதியில் உள்ள தனியாா் வங்கியை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

Updated On :18 மார்ச் 2023, 12:00 am IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மணமேடு பகுதியில் உள்ள தனியாா் வங்கியை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தொட்டியம் அருகே மணமேடு பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வங்கிக் கணக்கு உள்ள நபா்களுக்கும், முதியோா் உதவித்தொகை பெறுபவா்களுக்கும் உரிய சேவை வழங்காதது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் வெள்ளிக்கிழமை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் (பொறுப்பு) சிவகுமாா் வங்கி மேலாளரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு ஆதாா் எண் பதிவு செய்து உரிய தொகை அளிக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.