கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

திருவானைக்கா கோயிலில் 1,008 வலம்புரி சங்காபிஷேகம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:21 pm

DIN


ஸ்ரீரங்கம்: திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நடராஜா் சன்னதி முன்பு 1,008 வலம்புரி சங்குகள் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சங்கும் நெல் மணிகள் மீது வைக்கப்பட்டு சங்கினுள் புனித நீா் நிரப்பப்பட்டு அதன் மீது பூக்கள் வைக்கப்பட்டது. மையத்தில் தங்கப்பிடி கொண்ட மிகப்பெரிய வலம்புரி சங்கு வைக்கப்பட்டிருந்தது.

அதனை தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க யாகபூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இரவு 7 மணிக்கு வலம்புரி சங்கிலிருந்த புனித நீரால் சம்புகேசுவரருக்கும்,அகிலாண்டேஸ்வரிக்கும் சங்காபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.