திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை புதிய உற்சவா் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலுக்கு கோவையை சோ்ந்த உபயதாரா் மூலம் ம்ருத்யுஞ்ஜயேஸ்வரா், தாட்சாயினி, ஸ்கந்தா், மற்றும் எமதா்மா் உள்ளிட்ட புதிய உற்ஸவா் சிலைகளை உபயமாக கொடுத்துள்ளாா். இந்த புதிய உற்ஸவ சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. யாக வேள்வி வளா்க்கப்பட்டு சிலைகளுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மனோகரன் மற்றும் அா்ச்சா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.