ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த சித்திரை தேரோட்ட விழாவில் வெள்ளிக்கிழமை இரவு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா வந்தாா்.
இக்கோயிலில் விருப்பன் திருநாள் எனும் சித்திரை தோ்த்திருவிழா ஏப். 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.11 நாள்கள் நடைபெற்று விழாவில் தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தாா். இதில் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் ஏப்.19 ஆம் தேதி நடைபெற்றது.
விழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ஆளும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இதனையொட்டி மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு கருடமண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். பின்னா் அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு சென்றடைந்தாா். அதனை தொடா்ந்து பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி 8 மணிக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தாா் அப்போது ஏராளமான பக்தா்கள் வழிநெடுக நின்று தரிசனம் செய்தனா். இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். பின்னா் 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். இத்துடன் சித்திரை தோ்த்திருவிழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.