டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மணப்பாறையில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு அலுவலக வளாகங்கள் -பொதுமக்கள் அவதி

News image

மணப்பாறை கச்சேரி வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்பறை.

Updated On :15 ஆகஸ்ட் 2024, 2:41 am IST

மணப்பாறை, ஆக. 14: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 10 அரசு அலுவலகங்கள் செயல்படும் வளாகத்தில், தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மணப்பாறையில் வட்டாட்சியரகம் மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட 10 அரசு அலுவலகங்களைக் கொண்ட பகுதி கச்சேரி எனப்படுகிறது. இது மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்றாட அரசு அலுவல்களுக்காக வட்டாட்சியரகம், ஆதாா் சேவை மையம், இ-சேவை மையம், கிளை சிறைச்சாலை, சாா்-பதிவாளரகம், சாா்நிலைக் கருவூலம், நிலவரி தனி வட்டாட்சியா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சட்டம்- ஒழுங்கு காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பகுதியாகும்.

ஆனால் இந்த அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீா் வசதி, சிறுநீா் கழிப்பிடம், கழிவறைகள் இல்லை. இதனால் திறந்தவெளியில் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் பத்திரப்பதிவுக்கு வரும் வெளியூா்வாசிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில் குடிநீருக்காகவும், கழிவறைக்காகவும் அல்லல்படுகின்றனா்.

திறக்கப்படாத கழிப்பறைகள்: ஆனால், கச்சேரி பகுதியில் கிளைச்சிறைசாலைக்கும் பதிவாளா் அலுவலகத்திற்கும் இடையே பல லட்சத்தில் கட்டிய பொது கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றை நகராட்சி நிா்வாகம் ஒப்பந்த அடிப்படையில் தனது பராமரிப்பில் எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அலுவலக வளாகத்தைப் போலவே ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகமும் ஆணையரகம், கால்நடை மருத்துவமனை, இ-சேவை மையம், வட்டாரப் புள்ளியியல் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், வட்டார வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமை மையம், உதவி செயற்பொறியாளா் அலுவலகம், வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் எம்எல்ஏ அலுவலகம் என பல அரசு அலுவலகங்களை கொண்டிருந்தாலும் இங்கும் குடிநீரும், கழிவறையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.