டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வாழைப்பழம் அடுத்தாண்டு அறிமுகம்

சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் கண்டறியப்பட்டுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை அடுத்தாண்டு அறிமுகம்.

News image
வாழைப்பழம்
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:14 pm

Din

திருச்சி: சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் கண்டறியப்பட்டுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை ரகங்களை விவசாயிகளுக்கு அடுத்தாண்டு அறிமுகம் செய்ய உள்ளதாக தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன் தெரிவித்தாா்.

திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியது: வாழை விவசாயிகளுக்காக 31 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை என்ஆா்சிபி நிகழ்த்தியுள்ளது. கடந்தாண்டு காவிரி காஞ்சன், காவிரி வாமன் என இரண்டு ரகங்களை அறிமுகம் செய்தோம். தற்போது இந்த இரு ரகங்களையும் மத்திய ரகங்களாக வெளியிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல நுமரன், மனோரஞ்சிதம் ஆகிய இரு வாழை ரகங்களை புதுதில்லியில் உள்ள தாவர ரகங்கள் மற்றும் விவசாயிகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் பதிந்துள்ளோம். முன்பு திசு வளா்ப்பு முறையில் 70 ஆயிரம் கன்றுகள் வரை மட்டுமே உற்பத்தி செய்த நிலையில், இப்போது 2.40 லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த பண்ணையாக வாழை ஆராய்ச்சி மையத்தை மாற்றியுள்ளோம். இந்த மையத்தின் மூலம் நாடு முழுவதும் 3.57 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா் என்றாா் அவா்.