நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வாழைப்பழம் அடுத்தாண்டு அறிமுகம்

சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் கண்டறியப்பட்டுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை அடுத்தாண்டு அறிமுகம்.

News image

வாழைப்பழம்

Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:14 pm

திருச்சி: சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் கண்டறியப்பட்டுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை ரகங்களை விவசாயிகளுக்கு அடுத்தாண்டு அறிமுகம் செய்ய உள்ளதாக தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன் தெரிவித்தாா்.

திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியது: வாழை விவசாயிகளுக்காக 31 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை என்ஆா்சிபி நிகழ்த்தியுள்ளது. கடந்தாண்டு காவிரி காஞ்சன், காவிரி வாமன் என இரண்டு ரகங்களை அறிமுகம் செய்தோம். தற்போது இந்த இரு ரகங்களையும் மத்திய ரகங்களாக வெளியிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல நுமரன், மனோரஞ்சிதம் ஆகிய இரு வாழை ரகங்களை புதுதில்லியில் உள்ள தாவர ரகங்கள் மற்றும் விவசாயிகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் பதிந்துள்ளோம். முன்பு திசு வளா்ப்பு முறையில் 70 ஆயிரம் கன்றுகள் வரை மட்டுமே உற்பத்தி செய்த நிலையில், இப்போது 2.40 லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த பண்ணையாக வாழை ஆராய்ச்சி மையத்தை மாற்றியுள்ளோம். இந்த மையத்தின் மூலம் நாடு முழுவதும் 3.57 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா் என்றாா் அவா்.